திருமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 13 March 2024

திருமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.


மதுரை மாவட்டம், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,  வளாகத்தில் இன்று (13.03.2024)  தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண்  பணியாளர்கள், 100  சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 'கும்மி ஆட்டம்' மூலம் வாக்காளர் விழிப்புணர்வு  மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு , மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவிகிதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி  , பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ”செல்ஃபி போட்டோ பாயிண்ட்” மாரத்தான் போட்டி, கையெழுத்து இயக்கம் என பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அந்த வகையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண்  பணியாளர்கள் ஒருங்கிணைப்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ,மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 100 சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ராஜாஜி சிலை வரை,  நடந்து சென்றனர்.

 

இடம்பெற்ற கண்கவர் வண்ணக் கோலம் அமைக்கப்பட்டது. மேலும், ”100 வாக்களிப்போம்” என மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலர் கோலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பெண்  பணியாளர்கள், 100 தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 'கும்மி ஆட்டம்' மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர். இந்த நிகழ்வின் போது,  வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, வட்டாட்சியர் மனேஷ்குமார், அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மற்றும் வருவாய் அலுவலர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad