கனரா வங்கியின் ஒபிசி ஊழியர்களின் மாநில கூட்டம் மதுரை யில் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகர் ஜி.வி. மணிமாறன் தலைமை யேற்றார். கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் சங்கர், அகில இந்திய தலைவர் ஸ்ரீராம், தேசிய பொதுச்செயலாளர் குமார் கிராந்தி மற்றும் 300- க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஏழை குழந்தைகளின் கல்விக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் மகள் ஜனனி நினைவாக, "ஜனனி ஆயீ பூர்ணம்" என்ற பெயரில் 10 மற்றும் 11வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் கனரா வங்கியில் பணிபுரியும் ஓபிசி வகுப்பை சார்ந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் அறிவிப்பை சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் குமார் கிராந்தி வெளியிட்டார்.
No comments:
Post a Comment