இங்குள்ள சமையல் கூடமும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஆகையால், புதிய சமையல் கூடத்தையும் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். ஆகையால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை கட்டி வகுப்பறைகளை மாற்ற வேண்டும் என்றும் இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதே போல், அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தை இடித்து நான்கு ஆண்டுகளாகியும் ,புதிய அங்கன்வாடி மையம் கட்டாததால், தற்போது வரை சமுதாய கூடத்தில் அங்கன்வாடி செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விரைவில் அங்கன்வாடி மையம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், சமுதாயக்கூடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் ஊராட்சி மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களின்சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் தெருவோரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment