மதுரையில், மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 5 February 2024

மதுரையில், மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டி.


மதுரை பாத்திமா கல்லூரி அருகே, மதுரை சிலம்பம் அசோசியேசன் சார்பாக 200 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிலம்பப் போட்டி நடைபெற்றது. மதுரை சிலம்பம் அசோசியேஷன்  செயலாளர் கதிரவன்  பேட்டி அளித்தார், அதனைத் தொடர்ந்து, பேசிய அவர் மதுரை சிலம்பம் அசோசியேஷன் நடத்தும் ஐந்தாவது மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மதுரை பாத்திமா கல்லூரி அருகே உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில், 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று உள்ளனர். போட்டியானது நெடுங்கம்பு சுற்று, நடுக்கம்பு சுற்று, இரட்டை கம்பு சுற்று, நிராயுதபாணி வரிசை ஆகிய நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. மேலும், முதன் முதலில் ,மதுரையில் எலக்ட்ரானிக்ஸ் ஸ்கோரிங் சிஸ்டம் பயன்படுத்தி போட்டிகள் நடைபெற்றன என்று தெரிவித்தார் .


இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக மதுரை சிலம்பம் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, இந்த போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad