சிவகங்கை மாவட்டம், நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த தெற்கு வளைவு தெருவில் வசிக்கும் சின்ன கருப்பன் மகன் கலையரசன் (வயது 50) .இவர் மீது, கடந்த 2020ஆம் ஆண்டு சிவாநாச்சியாபுரம் போலீஸ் காவல் நிலையத்தில், கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், தலைமறைவானார்.
இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுகோட் நோட்டீஸ் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, தேடப்படும் குற்ற வழியாக அறிவிக்கப்பட்ட கலையரசன், இன்று ஏர் இந்தியா மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதனை த்தொடர்ந்து, மதுரையில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், 2020 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளி என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் நாச்சியார் புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் துறையினர் மதுரை விமான நிலையம் வந்தடைந்து, கலையரசனை கைது செய்து அழைத்துச் சென்றனர். கொலை முயற்சி வழக்கில் நான்கு ஆண்டுகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கலையரசன் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment