தமிழ்நாடு, தெலுங்கானா உட்பட 25 மாநிலங்களிருந்து 300க்கும்மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ,18 வயதிற்குட்பட்ட சிறுவர் குழுபோட்டியில் தமிழ்நாடு அணி மகாராஷ்டிரா அணியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிபருக்கான குழுபோட்டியில் தமிழ்நாடு அணிதெலுங்கானா அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது. நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ்நாடு அணி இருபிரிவுகளிலும் தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளது.
இப்பரிசளிப்பு விழாவில், ஆல் இந்திய கேரம் பெடரேஷன் அசோசியேட்டின் துணைத் தலைவர் நாசர்கான் மற்றும் மதுரை மாவட்ட கேரம் அசோசியேசன் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் பொதுச் செயலாளர் பாரதிய நாராயண் அர்ஜுனா அவார்ட் மரியஇதயம் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுந்தர் எம்.ஆர். கல்வி குழுமத்தின் தாளாளர் ரகுநாதன், எஸ். ஆர். எம் கல்லூரியின் முதல்வர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை, தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் பொருளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment