தேமுதிக 24ம் ஆண்டை முன்னிட்டு திருமங்கலம் பகுதிகளில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர், மதுரை தெற்கு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தே.மு .தி.கழகத்தின் மாவட்ட செயலளார் கணபதி அவர்கள் 24 ஆம் ஆண்டு முன்னிட்டு திருமங்கலம் நகரத்தில் உள்ள சந்தைப்பேட்டையில் கழகக் கொடியினை ஏற்றி ,பொது மக்களுக்கு இனிப்புகள் வாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், திருமங்கலம் நகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருமங்கலம் நகர அவை தலைவர் சகாதேவன், நகர பொருளாளர் வெங்கடேசன், திருமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் அழகர்சாமி விவசாய அணி செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதில் மாநில மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேமுதிகவின் 24 ஆம் ஆண்டு கொடி ஏற்ற விழாவை கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment