இந்த தண்ணீர் திறந்து விடும் பகுதியில், சிறிய தடுப்பணை கட்டி தேவைப்படும் அளவுக்கு தண்ணீரை தேக்கி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் வரக்கூடிய தண்ணீரையும் நிலையூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரையும் கீழ மட்டையானுக்கு சொந்தமான கண்மாயில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு தேவைப்படும் போது, சிறிய தடுப்பணை வழியாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு சேதப்படுத்திய நபர்களை கண்டுபிடித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது சொத்தை சேதப்படுத்தும் ஓர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் தான், இது போல செயல்களை தடுத்து நிறுத்தலாம் என, கிராம மக்கள் அரசை கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment