செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 31 January 2024

செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.


தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் சரவணன்,  ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில்  வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது, அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனை வளாகத்தில் திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், அவரிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
 

தலைமைக் காவலரின் இத்துரித செயலை, பாராட்டும் விதமாக மதுரை மாநகர ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து,  பண வெகுமதியும் கொடுத்து கௌரவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad