ஆசிரியர் சாவித்திரிபாய் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 4 January 2024

ஆசிரியர் சாவித்திரிபாய் பிறந்தநாள் விழா.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி காந்திஜி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை  சாவித்திரிபாய் பூலே பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பள்ளிச் செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன்,  பேரூர் செயலாளர் ஆ.கா.அரசு விஜயார், மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளர் சிறுத்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி குழுத் தலைவர்  தனபால் வரவேற்றார். 


இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் சாவித்திரிபாய்  திருவுருவ படத்திற்கு மாவட்டச் செயலாளர் சிந்தனைவளவன், மா லை அணிவித்து மரியாதை செலுத் தி இனிப்பு வழங்கினார். இதில், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் பீட்டர் ஆசீர்வாதம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad