மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 31 January 2024

மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் 30.1.24 அன்று  பள்ளிக்கல்வி த் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மாநில அளவில் வென்றதற்கான முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்று  அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் தங்களது கலை திறனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய மதுரை மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மதுரை ஏஆர்.லைன் நடுநிலைப்பள்ளி மாணவி, சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மதுரை கப்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மதுரை வாடிப்பட்டி குட்லாடம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவன், அரசு உயர்நிலைப் பள்ளி ஊமச்சிகுளம் பள்ளிமாணவன் மேலும் மாநில அளவிலான போட்டிகளில் மூன்றாம் பரிசு பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகள்.. கலைத் திருவிழா சிறப்பாக அமைய ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து அலுவலர்கள். மாநில அளவிலான பரிசு பெறும் விழாவிற்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் மதுரை பள்ளிக்கல்வித் துறை பெருமையோடு வாழ்த்துகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad