ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் இன்று "சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 13 January 2024

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் இன்று "சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் இன்று "சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டக்கிளையின் தலைவர் ஜனாப் கே.மஹபூப்பாட்சா தலைமை வகித்தார்! வட்டக்கிளையின் துணை தலைவர் இரா.வெங்கிட கிருஷ்ணன் முந்நிலை வகித்தார்! பிரேமாராணி, பாண்டிச் செல்வி மற்றும் ஆர்.ஜெயந்தி ஆகியோர் பொங்கல் பொங்கி வர, சமத்துவ பொங்கல்!பொங்கலோ பொங்கல் என்றுமகிழ்ச்சியுடன் முழக்கமிட, குழுமியிருந்த உறுப்பினர்கள் அனைவரும் அவர்களை தொடர்ந்து "சமத்துவ பொங்கலோ பொங்கல்"ஆனந்தத்துடன் முழக்கமிட்டனர்.

பொங்கிய பொங்கல் மற்றும் கரும்பு ஆகியவற்றை இந்து கடவுள் மகாலெட்சுமி, இஸ்லாமியர் தொழும் அல்லா,கிறிஸ்த்துவர்கள் போற்றி வணங்கும் இயேசு ஆகிய கடவுள்களுக்கு படைத்து வணங்கி சமத்துவத்தை நிலைநாட்டினார்! சமத்துவ பொங்கல் விழாவில் நிர்வாகிகள் என்.நடராஜன், ஆர்.பாலகிருஷணன், எம்.நடராஜன், ரகுநாதன் ஆகியோரும் மற்றும் மூத்த உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, முருகேசன், நாகலிங்கம், சந்திரபோஸ், சுப்பிரமணியம், காசிராஜன், ராஜ் மோகன், சங்கரநாராயணன், மாதவன், சேதுராமன், தனலெட்சமி மற்றும் திரளான உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad