மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி முதலியார் கோட்டை அருகே கிருஷ்ணா நகர் என்ற பெயரில் புதியநகர் துவக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தார். சோழவந்தான் காவல் ஆய்வாளர் பால்ராஜ், முதலியார் கோட்டை கிராம தலைவர் ஜெயக்கொடி குத்துவிளக்கு ஏற்றினர். பேரூராட்சி கவுன்சிலர் டீக்கடை கணேசன் வரவேற்றார்.
அதிமுக தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன், சங்கங்கோட்டை கிராமத் தலைவர் வக்கீல் சிவா சிறப்புரை ஆற்றினர். திமுக பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ், சிவா, வசந்தி, சரண்யா, அரிமா சங்கம் தலைவர் டாக்டர்மருது பாண்டியன் செந்தில்வேல், ரேகா ராமச்சந்திரன், வள்ளி மயில், கௌதம் நிஷா, செல்வராணி ஜெயராமன், சண்முக பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா புரமோட்டர்ஸ் இளங்கோ,மீனு ஆனந்த் முருகன் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment