மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளமல் வாடிவாசலுக்கு அழைத்துச் செல்லப்படும் ஜல்லிக்கட்டு காளைகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 January 2024

மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளமல் வாடிவாசலுக்கு அழைத்துச் செல்லப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்.


உலகப் புகழ் பெற்ற மதுரை அருகே, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. காலை 12 மணி அளவில் படி 430 காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு வாடி வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திடீரென காளைகள் மருத்துவ பரிசோதனை மையத்திற்கு வந்து ஒரு சில காளைகளை மருத்துவ பரிசோதனை ஏதும் மேற்கொள்ளாமல் வாடிவாசலுக்கு செல்லும்படி காளையின் உரியாமையாளருக்கு கூறினார்.


காளைகளின் உரிமையாளர்களோ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமல் காளைகளை வாடிவாசல் நோக்கி அழைத்துச் சென்று வருகின்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்களும் கண்டு கொள்ளாதது போல் இருந்தனர். முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படாத காளைகள் வாடிவாசல் களத்தில் செல்வதால், வாடிவாசலில் உள்ள மாடுபிடி வீரர்களுக்கு ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad