ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது, அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு நடத்த காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மட்டுமல்லாமல், அன்றைய ஆட்சியாளர்கள் மீதும் குறிப்பாக அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதும் கொலை வழக்கு பதிந்து நீதியை நிலைநாட்ட வேண்டியது மு.க. ஸ்டாலின், தலைமையிலான இன்றைய தமிழக அரசின் கடமை என, வலியுறுத்துகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில் முதல் இரண்டு இடம் பிடித்த வீரர்களுக்கு அரசு வேலை அளித்து, தமிழர்களின் விர மரபை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவரை சனாதன மாமுனி போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் அடாவடி செயலை எமது கட்சி கண்டிக்கிறது. இதன் மூலம் மதநல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் மதக் கலவரங்களை உருவாக்கி அமைதியை சீர்குலைக்கும் வேலையை ஆளுநரே செய்வது, தரங்கெட்ட கீழ்த்தரமான வெட்கக்கேடான செயலாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடியாளைப் போல் செயல்படும் ஆளுநரின் இத்தகு இழி செயல்களே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் பிஜேபி டெபாசிட் இழப்பதற்கு வழி வகுக்கும் எனவும் நம்புகிறோம்.
மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது தான் இந்தியாவின் இழந்த பெருமையை மீட்டு எடுக்கும் என, பொய்யுரைத்து, மக்களை மதி மயக்கி தவறாக வழி நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ். மோடியின் பாஜக அரசு. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக பாஜக எம்.பியான அனந்தகுமார் ஹெக்டே என்பவர் நம் நாடு முழுவதும் உள்ள மசூதிகளை இடித்துவிட்டு, அங்கு கோயில்களை கட்டுவோம் என, பிதற்றுவது அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு மாறானது.
இத்தகு பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் மட்டும் எதிரானது அல்ல பெரும்பான்மை இந்துக்களையும் அச்சுறுத்துவதாகும். மணிப்பூர் கலவரங்களைப் போல நாடு முழுவதும் கலவரங்களை உண்டு பண்ண முயலும் பாரதிய ஜனதா கட்சியினரின் இத்தகைய ஆபத்தான அரசியலில் இருந்து நாட்டைக் காக்க வேண்டும் எனில், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டியது மக்களின் கடமையாகும். அதற்கேற்ற வகையில், இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி நம் தேசம் காக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment