தமிழர் திருநாளாம் தை மாதம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடுவது வழக்கம் வீட்டு வாசலில் பொங்கலிட்டும் மாவிலை தோரணம் கட்டியும் தமிழர் பண்பாட்டை சிறப்பாக பாரம்பரிய முறையில் கொண்டாடுவார்கள். அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் தோரணைகள் கட்டி புதுப்பாணையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்புகள் கொடுத்தார். இதில் அனைவரும் சமத்துவ பொங்கல் என்று பொங்கலோ பொங்கல் என்று கோசமிட்டு பொங்கல் தின விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் நகரச் செயலாளர் ஸ்ரீதர் நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment