மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலு கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவ லர் சங்க கூட்ட மைப்பு சார்பாக தொழில் நுட்ப வரைவு அளவீட்டு பணிக்கு கூடுதல் அலுவலர்களை நியமனம் செய்து உபகரணங்கள் வழங்க கோரியும், புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அச்சுறு த்தலை கைவிட கோரியும் உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் முத்துக்குமர ன் தலைமை தாங்கினார். தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் மாசானம் ஆர்ப்பாட் டத்தை தொடக்கி வைத்தார். இதில், 50கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பான கோஷங்கள் எழுப்பினர். முடிவில், வட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment