வாடிப்பட்டி பேரூராட்சியில், ரூ.22.47 கோடி மதிப்பீட்டில் அம்ருத் குடிநீர் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 10 January 2024

வாடிப்பட்டி பேரூராட்சியில், ரூ.22.47 கோடி மதிப்பீட்டில் அம்ருத் குடிநீர் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார்.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், ரூ.22.47கோடி மதிப்பீட்டில் அம்ருத் குடிநீர் விநியோக மேம்பாட்டு திட்டபணியினை, அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கி வைத்தார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், மத்திய அரசின் அடல்மறு சீரமைப்பு மற்றும் நகர்புறமாற்றுஇயக்கம் அம்ருத் திட்டம் சார்பாக ரூ.22.47கோடி மதிப்பீட்டில், குடிநீர் விநியோகப்பணிகள் தொடக்கவிழா 6-வது வார்டு லாலாநகரில் முதல்கட்டமாக 2லட்சம் கொள்ளவு கொண்ட மேல் நிலைக் குடிநீர் தொட்டி கட்டிட பூமிபூஜை நடந்தது. இந்த விழாவிற்கு, பேரூராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். 

வெங்கடேசன் எம்.எல்.ஏ., உதவிஇயக்குநர் எஸ். சேதுராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலெட்சுமி வரவேற்றார். இத்திட்டத்தினை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி தொடக்கிவைத்தார். இதில், அம்ருத்திட்ட குழுத் தலைவர் பொறியாளர் பரூக், ராமசாமி, கவுன்சிலர்கள் பூமிநாதன், ஜெயகாந்தன், கார்த்திகாராணி மோகன், சரசுராமு, மற்றும் அலுவலக பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் முத்துபாண்டி நன்றிகூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad