முன்னாள் முதல்வர் அம்மா பெயரில் அம்மா கிச்சன் மூலம் நடைபெற்று வரும் இந்த அன்னதானமானது தொடர்ந்து, பத்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. தற்போது, தைப்பூச திருவிழா நடைபெறக்கூடிய நிலையில், அதிக அளவில் பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இவர்களுக்கு காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறது. இதுகுறித்து, பக்தர்கள் கூறும்போது: தொடர்ந்து, பத்தாவது நாளாக அன்னதானம் வழங்கி வரும் அதிமுகவினருக்கு பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து, நடை பயணம் செல்லும் எங்களுக்கு இது போன்ற அன்னதானம் வழங்குவது புது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.
இன்று பத்தாவது நாளாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், மாநில அம்மாபேரவை இனைச்செயலாளர் வெற்றிவேல், மாநில எம்ஜிஆர் மன்ற துனைச்செயலாளர் எ.ராமகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்கண்னா, மாவட்ட விவசாய அனி இனைச்செயலாளர் வாவிடமருதூர் ஆர்பி குமார், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, வாடிப்பட்டி பாலா, கச்சகட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமனி , குருவித்துறை காசிமாயன், முனியான்டி, சந்திரன், சித்தாலங்குடி ஜெயகுமார், தங்கம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment