பாலமேட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயற்கோபுர மின் விளக்கு , எம்.பி.ரவீந்தரநாத் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 14 January 2024

பாலமேட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயற்கோபுர மின் விளக்கு , எம்.பி.ரவீந்தரநாத் தொடங்கி வைத்தார்.


மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி, 1-வது வார்டு வாடிவாசல் பின்புறம், உள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுரம் மின் விளக்கை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி தொடங்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு, ஓ.பி.எஸ் .அணி  மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். 

பேரூர் செயலாளர் இ.பா.சேகர், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், ஜோதிமுருகன்,  அவைத் தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்ல பாண்டி, அய்யாவு, அழகுமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்: தேனி தொகுதியில் நிச்சியம் மீண்டும் போட்டியிடுவேன். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வடிவாசல் பின்புறம் உள்ள பகுதியில் இந்த மின்விளக்கு மிக முக்கியமாக தேவைப்பட்டது. இதனால், உடனடியாக நிதி ஒதுக்கி ஜல்லிக்கட்டு நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, இந்த உயர்மின் கோபுர விளக்கை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad