சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் சக்கரப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி அழகம்மாள் வயது 23. இவர் கர்ப்பணியாக இருந்தார். நேற்று அதிகாலை வலி ஏற்பட்டு விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து 108 மூலமாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு டிரைவர் பிரகாஷ் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அழகம்மாளை மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
கீழமாத்தூர் அருகே சென்ற பொழுது அழகம்மாளுக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் அஜித்குமார் மற்றும் டிரைவர் பிரகாஷ் ஆகியோர் அழகம்மாளுக்கு பிரசவம் பார்த்தனர் இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது அங்கிருந்து திரும்பி விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகம்மாளையும் 108 பிறந்த குழந்தையும் சேர்த்தனர். சுகமாக குழந்தையை பெற்றெடுத்த 108 பணியாளர்களை உறவினர்கள் பாராட்டி நன்றிய தெரிவித்தனர்.
No comments:
Post a Comment