மதுரை மாநகராட்சி கோமதிபுரம் ஜூப்ளி டவுன் திருக்குறள் வீதியில், மதுரை மாநகராட்சி சார்பில் சிறிய பாலம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாகத்தான் தாசில்தார் நகர் மக்கள் ,ஜூப்ளி டவுன் பகுதிக்கு செல்ல வேண்டும்.
மேலும், பாலத்தின் வழியாக லாரிகள் மற்றும் வேன்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பாலம் கட்டி ஓராண்டுக்குள் பாலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் இவர் வழியாகச் செல்லும் இருசக்கர வாகனத்தில் அவதி அடைந்து வருகின்றனர். அத்துடன் பாலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், பாதசாரிகள் தடுமாறி விடுகின்ற நிலை ஏற்படுகிறது.
ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் பார்வையிட்டு, சேதமடைந்த சிறிய பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
No comments:
Post a Comment