மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், தெப்பக்குளம் மாரியம்மன், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர், சோழவந்தான், ஜெனகை மாரியம்மன், நாராயணப் பெருமாள், பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை மதிச்சியம் வீரமா காளியம்மன் ஆலயங்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்: சோழவந்தானில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை சோழவந்தான் ராவுத்த நாயக்கர் தெரு ஸ்ரீ கொண்டல் ராவுத்தர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்திலிருந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தனர் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர் அதில் காலையில் நீவைத்திய அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது. ஆன்மீகவாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment