திருவேடகம் விவேகானந்த கல்லூரி கல்லூரியில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 13 December 2023

திருவேடகம் விவேகானந்த கல்லூரி கல்லூரியில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா.


மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரதிய சிந்தனை அரங்கத்தின் சார்பில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரதிய சிந்தனை அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ராமர் வரவேற்புரையாற்றினார். 

முதல்வர் தி. வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரி வணிகவியல் துறையின் மேனாள் தலைவர் முனைவர் க.அழகேசன் 'பாரதியும் பாச்சுவையும்' என்ற தலைப்பிலே சிறப்புரையாற்றினார். மாணவர்கள் சோ.தரணி, சி.ராஜா ஆகியோர் பாரதியார் குறித்து உரையாற்றினர். 


மாணவர்கள் ப.விவேகானந்தன், க.விஷ்ணுபாலாஜி ஆகியோர் பாரதி குறித்த கவிதை வழங்கினர். வரலாற்றுத் துறை பேராசிரியர் முருகன் நன்றியுரை கூறினார். பொருளியல் துறை பேராசிரியர் அசோக் குமார் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad