மதுரை மாவட்டம் கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் கலந்து கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் நிகழ்வு. மாவட்ட உதவி திட்ட அலுவலர் கார் மேகம் சரவணன் முருகன் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்வு இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்காக 63 மாணவர்கள் மாணவிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களுடன் மொத்தம் 68 பேர் புறப்பட்டு செல்கின்றனர்.
இதுவரை மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 410 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை24.11.23 நடைபெறும் போட்டிக்காக இன்று புறப்பட்டு செல்லும் மாணவர்கள் நடனம் நாட்டியம் இசை வாய்ப்பாட்டு போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment