வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 4 November 2023

வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பு.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக  (04.11.2023) சென்னை,பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.


இதனையடுத்து ,மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற "நடப்­போம் – நலம் பெறு­வோம்  நிகழ்ச்சியில்,  வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ,  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றார்கள்.


உலக சுகா­தார அமைப்­பின் தர­வு­கள்­படி உடற்­ப­யிற்சி செய்­வது நீரி­ழிவு மற்­றும் இரத்த அழுத்த நோய்­க­ளின் தாக்­கத்தை 27 சத­வீ­த­மும், இதய நோயின் தாக்­கத்தை 30 சத­வீ­த­மும் குறைக்கின்­றது என்று அறி­யப்­ப­டு­கி­றது. நடை­ப­யிற்­சி­யா­னது மக்­களை சுறு­சு­றுப்­பா­க­வும் ஆரோக்­கி­ய­மான எடை­யு­டன் இருக்­க­வும் நாள்­பட்ட உடல் பிரச்­சி­னை­கள் மற்­றும் மன அழுத்­தத்தை குறைக்­க­வும் உத­வு­கி­றது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையின் போது, 'நடப்போம்; நலம் பெறு­வோம்’ என்­ப­தற்­கிணங்க பொது­மக்­க­ளின் நலன் மற்­றும் ஆரோக்­கி­யத்­தைக் கருத்­தில் கொண்டு, அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உள்ள உள்­ளாட்சி அமைப்­பு­களு­டன் இணைந்து 8 கி.மீ. தூரம் கொண்ட நடை­பா­தை­யைக் கண்­ட­றிந்து, ஆரோக்­கி­ய­மான நடை­ப­யிற்சி மேற்­கொள்­வ­தற்­கான நடை­பா­தை­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் என,  அறிவிக்கப்பட்டது.


மக்­கள் நலம் பேணும் இந்த மகத்­தான திட்­டம் தமிழ்­நாட்­டின் 38 மாவட்­டங்­க­ளி­லும் சிறப்­புற நிறை­வுற்று, அதன் தொடக்க விழா இன்று (4.11.2023 – சனிக்­கி­ழமை) காலை நடைபெற்றது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ,  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்  ஆகியோர் பங்கேற்றார்கள்.


மதுரை மாவட்டத்தில், "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ்இ  நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் ,மதுரை  ரேஸ்கோர்ஸ் மைதானம்  நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வந்தடையும் தூரம் மொத்தம் (8கி.மி) கொண்ட பாதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில், பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறைகள், இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர்  மா. சௌ. சங்கீதா மாநகர காவல் ஆணையர்  முனைவர். ஜெ.லோகநாதன்,  மாநகராட்சி ஆணையாளர்  லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்  மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற  உறுப்பினர் ஆ.  வெங்கடேசன் , மதுரை அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் மரு. ரத்தினவேல், மாநகராட்சி, மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத், துணை மேயர் தி.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad