பின்னர் பேசிய கிராம முக்கிய பிரமுகர்கள் கொண்டையம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது. மாலை மற்றும் இரவு வேலைகளில் பெண்கள் பள்ளிக்கூடம் பகுதிகளில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், பள்ளி வளாகத்திலேயே மது கஞ்சா போன்ற போதை வஸ்துகளை இளைஞர்கள் பயன்படுத்தி வருவதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
ஆகையால் ,அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் சுற்று சுவர் அமைத்து தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் சிலமடைந்துள்ள முல்லை பெரியார் பாசன கால்வாய் பகுதியை மராமத்து செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும், இது சம்பந்தமாக விரைவில் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட போவதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment