மதுரை மாவட்டத்தில், பலத்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது, மதுரை நகரில் காலை முதலே மழையானது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்து. இதனால் சாலைகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல், ஆங்காங்கே குளம் போல தேங்கி உள்ளன.
மதுரை வண்டியூர், யாகப்பநகர், தாசில்தார் நகர், வீரவாஞாசி தெரு, அன்பு மலர் தெரு, காதர் மொய்தீன் தெரு, மதுரை முனிச் சாலை, பழைய குயவர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை நகரில் சில இடங்களில், சாலையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். மதுரை அருகே சமயநல்லூர், தேனூர், சோழவந்தான், வாடிப்பட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், பள்ளபட்டி, அழகர்கோவில், மேலூர், திருப்பாலை, பரவை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
No comments:
Post a Comment