மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரஸன்ன வேங்கடேச பெருமாள் கோவில் கோவிலில் கடந்த அக்.,15ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முனைவர் S.மல்லிகா தலைமையில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி S.ஸ்ரீமதி இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்பு செய்தனர்.
வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட பல்வேறு பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன. வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment