தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர்கள் மின் கம்பத்தின் மீது விழுந்த மரக் கிளைகளை அகற்றி மின் தடையை சரி செய்யும் பணிகளை மேற்கொண்டர். இதனால், மேலக்கால் கிராமத்தில் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டிருந்தது. மின்சார வாரியம், கடந்த காலத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, மின்சார வயர்கள் செல்லும் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவது வழக்கமாம்.
ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளை தவிர, மின்சார சப்ளை செல்லும் வயர்கள் இன் ஊடே செல்லும் மரக்கிளைகளை வயர் மேன் கள் ஆர்வம் காட்டுவது குறைவதால், காற்று காலங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் பகுதிகளில், மின் வயரின் அருகே மரக்கிளைகள் குறுக்கிட்டும், மேலமடை மின்வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளதாக, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment