சோழவந்தான், ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 1 June 2023

சோழவந்தான், ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது.


மதுரை அருகே சோழவந்தான், ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது, இவ்விழாவை முன்னிட்டு, நேற்று மாலை அர்ச்சகர் சண்முகவேல் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார்.

அங்கிருந்து புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக பூக்குழிபொட்டல் வந்தனர். கோவில் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்துடன் பூக்குழி  இறங்கினாள். இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உட்பட நிறைவாக மணிகண்டன் என்பவர் 21 அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினார்கள்.



சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், கோவில் செயல்அலுவலர் இளமதி,எம்விஎம் குழுமத் தலைவர் மணி முத்தையா, வார்டுகவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன், சத்யபிரகாஷ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு நிலையஅலுவலர் பசும்பொன், போக்குவரத்து அலுவலர் கண்ணன் உள்பட தீயணைப்பு படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad