பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வுகான மதுரை மாவட்ட அளவிலான பயிற்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 24 April 2023

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வுகான மதுரை மாவட்ட அளவிலான பயிற்சி.


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உன்னத திட்டங்களில்  ஒன்றான நான் முதல்வன் - கல்லூரிக் கனவு 2023 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வருகிற மே மாதம் 6 ஆம் தேதிமுதல் (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்குப் பிறகு) அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வுகான மதுரை மாவட்ட அளவிலான பயிற்சி இன்று 24.4.2023 சேதுபதி மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்   .கா. கார்த்திகா தலைமை ஏற்று பயிற்சியை துவக்கி வைத்தார். 

பயிற்சியை துவக்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பேசுகையில் சிறப்புமிகு நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சியானது, அனைவரும் குழுவாக இணைந்து மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பது என்பது நம் அனைவரின் தலையாய நோக்கமாகும். கடைக் கோடியில் இருக்கும் கடைசி மாணவருக்கும் இத்திட்டம் போய் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 


நின்றுவிடாமல் அனைவரையும் கல்லூரியில் தொடர வைக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் சார்ந்த அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார். 

இப்பயிற்சிக்கு  மாவட்ட  கல்வி அலுவலர் (மேலூர்)   முத்துலட்சுமி அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர்  கந்தசாமி அவர்கள், உதவி மாவட்ட திட்ட அலுவலர்  .கார்மேகம், சேதுபதி மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர்  நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி பாரதிதாசனர் மேல்நிலைப் சார்ந்த முன்னாள் மாணவ மாணவியர் பள்ளிக்கு 5 பேர் வீதம் 50 மாணவ மாணவியர், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டு நிகழ்வுக்கு ஏற்கனவே பயிற்சி பெற்ற இப்பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்கள், மேலும் இப்பள்ளிகளைச் சார்ந்த  மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடி கல்வி கல்வியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் என மொத்தம்180 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


நான் முதல்வன் - கல்லூரிக் கனவு உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சியை மாநில அளவில் பயிற்சி பெற்ற மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள் கமலக்கண்ணன் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சரவண ஜோதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய் கணேஷ் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி வழங்கினர்.நிகழ்ச்சி திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரையும் உயர்கல்வியில் சேர்ப்பது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பள்ளிக்கு தொடர்ந்து வருகை தராத..... பள்ளியில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து தமது கல்வியை தொடர தகுந்த வாய்ப்பை உருவாக்கி தருகின்ற வகையிலும் இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி உயர்கல்வி வழிகாட்டல் குழுவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர் முன்னாள் மாணவர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உப தலைவர் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர்கள் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் (NSS students) ஆகியோர் இணைந்த குழுக்கள் இவ் வழிகாட்டு குழுக்களில் இடம்பெற்று இருப்பர்.


முதல் கட்டமாக இன்று நடக்கும் பயிற்சியை போல் இன்னும் எட்டு நாட்களுக்கு பத்து கட்டங்களாக பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வருகிற மே 6 முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 109 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய சுமார் 11,600 மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி சார்ந்த வழிகாட்டவும் பயிற்சி அளிக்கவும் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடையும் வகையில் சுமார் 1700 தன்னார்வலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad