மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் நீர் மோர் பந்தலை திருமங்கலம் பஸ் நிலையம் முன்பு திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தணிக்க நீர் மோர் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார்,துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகராட்சி செயலாளர் மூ.சி.சோ ஸ்ரீதர், தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டி, ஏர்போர்ட் பாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஸ்ரீதர் செய்திருந்தார்.

No comments:
Post a Comment