வீடு புகுந்து வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 1 April 2023

வீடு புகுந்து வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பிச்சைகாளி. இவரது மகன் அழகர் (வயது21), கட்டிட தொழி லாளி. சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் அழகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் மற்றும் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

வாலிபரை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக் கையில் ஈடுபட்டனர்.  அப்போது கொலையில் ஈடுபட்டது நிலையூரை சேர்ந்த அழகு சேதுபதி (25) மற்றும் திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்த அஜய் (24), பாண்டித்துரை (25), ஆதித்தன் (19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில், பேரையூரை சேர்ந்த ராமர் என்பவரது தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு ராமரின் தம்பி லட்சுமணன் கிணற்றில் விழுந்து இறந்தார். 


தம்பியின் சாவுக்கு அழகர் தான் காரணம் என கருதிய அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கொலையில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளி ராமரை போலீசார் தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad